பிரபல டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. பெரல் என்ற ஹேக்கர் பயணர்களின் தனிப்பட்ட மற்றும் அடையாள விவரங்களை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பயணர்களின் தனிப்பட்ட தகவல்கள், தொடர்பு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பில்லிங் விவரங்கள் இதில் உள்ளதாக தெரிகின்றது