தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதனைப் போலவே 35 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறவுள்ளனர். டிசம்பர் 18ஆம் தேதி முதல் இந்த விலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.