தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் முதல் திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஜய்யை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் வருண் தவானை வைத்து தெறி திரைப்படத்தை இந்தியில் இயக்குகின்றார். இதில் வருணனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக அவர் மும்பை சென்றுள்ள நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.