ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாணவிகளும் பெற்றோரும் பள்ளியில் முன்பு கூடி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 11 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வேதியியல் ஆசிரியரும் தற்போதைய பள்ளி முதல்வருமாக இருப்பவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து ஆசிரியர் கூறுகையில் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரம் இல்லை, சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் பள்ளி அதிகாரி பரம்ஜித் கவுர் கூறுகையில், “மாணவிகளும் பெற்றோரும் ஆசிரியர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.