இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்புகளுக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பாலஸ்தீனியர்கள் என்று கூறலாம். இதனிடையே இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 90 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இனி பணிய தொடர முடியாத காரணத்தினால் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.