நாசாவின் சாட்டிலைட் வெளியிட்ட வட இந்தியாவின் புகைப்படம், புகை மூட்டமாக காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் காற்று மாசுபாடு என்பது பேரழிவின் உச்சமென்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் இடையே காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதில் இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளி வர இருப்பதால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.