மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சி (NTK) வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யா ராணி அதே பகுதியில் வாக்கு சேகரிக்க முயன்றார்.
ஒரே இடத்தில் இரு தரப்பினரும் பிரசாரம் செய்ததால், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பதற்றத்தைத் தணிக்கவும் காவல்துறையினர் வித்யா ராணியை அங்கிருந்து அகற்ற முயன்று, பின்னர் அவரை கைது செய்தனர்.
#JUSTIN பாமக தலைவர் அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா தடுத்து நிறுத்தம்
பரப்புரை செய்ய அனுமதி மறுப்பதாக வீரப்பன் மகள் வித்யா குற்றச்சாட்டு#Salem #Mecheri #PMK #Anbumani #NTK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Q6jKryFH0K
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 20, 2026
தான் எங்கு சென்றாலும் திமுக மற்றும் அதிமுகவினர் திட்டமிட்டு தனது பிரசாரத்தைத் தடுப்பதாக வித்யா கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சாலையிலேயே அமர்ந்து அழுதபடி முறையிட்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு வேட்பாளர் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.
