ஆதார் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடம் தோறும் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் வருடத்திற்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு என்பது அவசியம். அதனைப் போலவே 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பவும் பான் கார்டு அவசியம். இத்தனை முக்கியமான பான் கார்டு ஆனது வருமான வரி துறையால் வழங்கப்பட்டு வருகிறது. பான் கார்டு பற்றி தெரிந்த பலருக்கும் ப்ரான் கார்டுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தக் கார்டுகள் என்பிஎஸ் என்ற தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் மற்றும் ஓய்வூதிய பண பலன்களுக்கு உரிமை கோர உதவுகிறது. இந்த கார்டுகள் ஓய்வூதிய திட்டத்துடன் தொடர்புடையது. இதில் 12 இலக்க எண்கள் இடம் பெற்று இருக்கும். இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். இதனை நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட் லிமிடெட் நிறுவனம் வழங்கி வரும் நிலையில் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு இந்த பிரான் கார்டு கட்டாயமாக உள்ளது. அனைத்து விதமான முதலீடுகளையும் பரிவர்த்தனைகளையும் கண்காணிப்பதற்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கவும் இந்த கார்டுகள் பயன்படுகின்றன. தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீடு செய்பவர்களுக்காக இந்த பிரான் அட்டைகள் வழங்கப்படுகின்றது.