புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யும்படி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மழையால் பாதிக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தவிர்த்து வருகின்றனர். அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை தன்னார்வலர்களாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.