பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசார் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பாஜக எம்பி திலிப் கோஸ் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.