வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஏப்ரல் 7) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் குடிசைகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து 40 ஆண்டுகளாகின்றன.

ஆனால் மத்தியிலோ வெளிநாடுகளில் இருந்து யாரேனும் வந்தால் குடிசை மறைப்பு வாரியம் என்பது போல் குடிசையை திரை போட்டு மறைகின்றனர். குஜராத் மாடல் அப்படிதான் இருக்கும். நமது உணவு, உடை உள்ளிட்டவற்றை அவர்கள் முடிவு செய்கிறார்கள். அது நடக்கக் கூடாது. பாஜக அரசு மக்களுடன் ஒன்றாத அரசு என்று விமர்சித்தார்.