தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவி 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து, 2012ல் கட்சியை காங்கிரசில் இணைத்த அவர், 2014 தேர்தலில் தோல்வியடைந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், தற்போது சிரஞ்சீவி பாஜகவின் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் பாஜகவில் இணைவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.