மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். பின்னர் ராஜேந்திர பண்டாரி பேசுகையில், நாட்டை வழி நடத்துவதில் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளது என்றார்.