கேரளாவின் வயநாடு மக்களவைதொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் அங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இதனிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன், கடந்த 5 ஆண்டுகளாக ராகுல் தொகுதிக்கு வருவது இல்லை என்றும் தன்னுடனே அவர் தொடர்பில் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.