கோடை சீசனை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களை திட்டமிட்டு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நாட்டில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.