தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் காவல் சீருடைகள் பாஜகவில் இணைந்தது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். தற்போது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.