
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் பப்ஜி காதலனை தேடி இந்தியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக வந்ததோடு இங்கேயே அவருடன் வாழ தொடங்கி விட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதனிடையே சீமாவின் இந்தியப் பிரவேசம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள இந்து வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்களிடமிருந்து மிரட்டல் வந்திருந்தது.
இந்நிலையில் சிந்து மாகாணம் காஷ்மோர் நகரில் உள்ள இந்து கோவில் மீது நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.