பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்த அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் அந்த மசூதிக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதலுக்கு முயன்றனர். அவர்களை தடுக்க காவல் அதிகாரி ஒருவர் சென்ற போது இருவரில் ஒருவர் தனது உடலில் கட்டி இருந்த குண்டை வெடிக்க செய்துவிட்டார்.

இந்த தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழந்ததோடு ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இரண்டாவது பயங்கரவாதி தப்பி ஓடி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.