நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களோடு இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்த கூட்டம் தொடங்குவதை முன்னிட்டு விஜய் இல்லத்தின் முன்பாக ஏராளமான நிரூபர்கள் கூடியிருந்தார்கள்.

அப்போது விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் ஆனந்த் புஸ்ஸி ஒரு நிரூபரை மட்டும் உள்ளே அழைத்து பேட்டி கொடுத்தார். இது மற்ற நிருபர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் ஒரு செய்தியாளர் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றாராம். அவரை பவுசர்கள் தடுத்ததால் ஆவேசமான அவர் எதற்காக ஒருவரை மட்டும் உள்ளே அழைத்து பேசுகிறீர்கள். எங்களை பார்த்தால் மனிதர்களாக தெரியவில்லையா? நாங்களும் காலையிலிருந்து இங்கே இருக்கிறோம்.

இதுபோன்ற செய்தால் விஜய் வரும்பொழுது நாங்கள் தர்ணாவில் அமர்ந்து விடுவோம். அப்புறம் விஜய் உள்ளே போக முடியாது பார்க்கிறாயா? என்று சத்தம் போட தொடங்கினார். இதனை அடுத்து வெளியே வந்த புஸ்ஸி நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் இனி இதுபோன்று நடக்காது என்று சமாதானப்படுத்தினார்