தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நிதி உதவி அளித்து வருகிறது.  இதனால் விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையினுள் தற்போது பவர் டில்லர், விசை களையெடுபான்களை மானியத்தில் வாங்க விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 5,000 வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய அவர், சிறு குறு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50% மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படும் என்றும் இதற்கு உழவன் செயலி வாயிலாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்