காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அரசு அல்லது தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்றால், பல அரசியல்வாதிகளைச் சந்தித்து பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்த பழைய கலாச்சாரம் தற்போது முற்றிலுமாக மலைஏறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இனி எத்தகைய சூழ்நிலையிலும், யாரிடமும் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார். தமிழக முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, இனி வரும் காலங்களில் எந்தவொரு வேலைவாய்ப்பிலும் முழுமையான தகுதி மற்றும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நியமனங்கள் நடைபெறும் என்று அவர் உறுதியளித்தார்.
🔔 | இன்று (22.08.2026) நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் @BussyAnand பேச்சு!
“வேலைக்காகப் பணம் கொடுத்து, காரியங்களைச் சாதிக்கப் பத்து வெவ்வேறு அரசியல்வாதிகளை அணுக வேண்டியிருந்த காலம் மலையேறிவிட்டது,
• இன்று, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ… pic.twitter.com/Nqsx0fQFej
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 22, 2026
“>
இளைஞர்களின் லட்சியங்களையும் கனவுகளையும் நனவாக்கும் வகையில் எதிர்காலம் அமையும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
