மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் அதன்பிறகு 100 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு c++, python பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.