விருதுநகர் அருகே செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டுச் சாணத்தை கரைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள  குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டுச் சாணத்தை கலந்துள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள், உடனடியாக தொட்டியை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.