கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியும் சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு இருவரும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி சிறுமி தனது காதலனிடம் கூறியுள்ளார்.

இதனால் சிறுவன் சிறுமியை அழைத்துக்கொண்டு விழுப்புரம் பனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் விரைந்து சென்று சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.