தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.