பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்கவைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோவில் ஸ்ரீசாய்பாபா பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு ராமர், சீதை வேடமிட்டு கழுத்தில் பாஜக கொடியுடன் பங்கேற்க வைத்தனர். இந்நிலையில், அந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.