பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக டி ஆர் டி ஓ முன்னாள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வம் மூர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், உலக அளவில் முன்னிலையில் உள்ள விஞ்ஞானிகளில் இரண்டு சதவீதம் பேர் இந்தியாவில் சேர்ந்தவர்கள். நமது நாடு புதிய கண்டுபிடிப்புகளின் தொட்டிலாகவும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் மையமாகவும் திகழ்ந்து வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.