கர்நாடகா மாநிலம் பாகிவாலு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் பின்புறம் கட்டி தூக்கி வந்துள்ளார். இதை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் சிறுத்தையின் கால்களை கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்பு, இளைஞரின் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டது. சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. அவர் சிறுத்தையை வண்டியில் எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.