சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீனவ அறிவியல்,கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளில் முதுகலை அல்லது இடங்களை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதனுடன் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தகுதி உடையவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை உதவி இயக்குனர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண் 2/601, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை சென்னை 600115 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04424492719, 9677047014 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது