அமெரிக்காவின் லாஸ் நகரத்தில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்து ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.