பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்கூடத்தின் அருகே குண்டுவெடித்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் மாணவர்கள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.