அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு ஸ்பேஸ் ஜெட் விமானம் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் பயணித்த தர்வால் தர்மேஷ் என்ற இளைஞருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறக்கி பயணி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் விமானம் அங்கிருந்து எரிபொருள் நிரப்பிவிட்டு துபாய்க்கு புறப்பட்டது.