கேரள மாநிலம் கோட்டயத்தில் மன்னார்காடு உள்ளூர் கோழி வளர்ப்பு மையத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 9 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்படுவதாக விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீசஸ் ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் H5N1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார்க்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் மற்றும் புதுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு மற்றும் மூன்று வார்டுகளிலும் நேற்று முதல் கோழி, வாத்து, காடை மற்றும் பிற நாட்டு பறவைகளின் முட்டை, இறைச்சி, உரம் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை அரசு தடை விதித்துள்ளது.