அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டி கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த 9ம் தேதி பிரபாகரனிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.