மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. மத்திய குழு தலைவர் குணால் சத்யார்த்தி, ஷிவ் ஹரே மற்றும் திமான் சிங் ஆகிய 3 பேர் சென்னை வந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பாதிப்பு பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. இதை எடுத்து 14 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். ஆய்வுக்குப் பின் சேத மதிப்பு அறிக்கையை மத்திய குழு ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே சென்னையில் உள்ளார். மத்திய குழுவின் பாவ்யா பாண்டே மற்றும் ரங்கனாத் ஆகியோர் இன்று காலை சென்னை வர உள்ளனர்.