டெல்லி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவா அவர்களை பாஜக கொலை செய்ய பார்ப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். நேற்று ராஞ்சியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துக் கொள்கிறார்.

ஆனால் சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது. டெல்லி முதல்வரை கொல்லப் பார்கிறார்கள் என்று பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.