ஜம்முவில் பயங்கரவாதிகள் எந்தவிதமான நாச வேலைகளையும் செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல் துறையினரும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினருக்கு ஜம்முவின் குல்காம்  மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குல்காம் மாவட்டத்திலுள்ள ஹளன் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள ராணுவத்தினரும் பதிலுக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த மோதலில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டினால் காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை தொடர்ந்து அப்பகுதியில் நடந்து வருகிறது.