கடந்த மாதம் 7 ஆம்  தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் பாதுகாப்பு பணியில் வீராங்கனையாக செயல்பட்டு வந்த நோவா என்பவரும் ஒருவர். கடந்த திங்கட்கிழமை நோவா ஹமாஸ் அமைப்பிடம் பணய  கைதியாக இருக்கும் காணொளி வெளியானது.

இந்நிலையில் நோவா மரணம் அடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹமாஸ்  அமைப்பு வெளியிட்ட காணொளி மூலமாக நோவாவின் மரணம் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் உளவு அமைப்பு கொடுத்த தகவலின் படி இஸ்ரேல் பாதுகாப்பு வீராங்கனையான நோவா மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது.