தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பண வசதி படைத்த குஷ்புவுக்கு பெண்கள் உரிமைத் தொகை பற்றி தெரிய வாய்ப்பில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய உரிமைத் தொகையை பிச்சை என குஷ்பு விமர்சிக்கிறார். கோடிகளில் புரளும் அவருக்கு இதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. அரசியலுக்காக வாய்க்கு வந்ததை குஷ்பு பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.