தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவோடு ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ், மத்திய பாஜக தலைமையோடு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். தினகரனுடன் நள்ளிரவில் பேச்சுவார்த்தையை முடித்த பாஜக தரப்பு, அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்போடு பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். இந்த கூட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.