நடிகை ராஷ்மிகா இப்போது தென் இந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். அதோடு ஹிந்தி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2, ரன்பீர் கபூர் உடன் அனிமல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட காலமாக ராஷ்மிகாவின் மேனஜர் ஆக இருந்து வந்த நபர் இப்போது நீக்கப்பட்டு இருக்கிறாராம். அந்த மேனஜர் தன்னிடம் பண மோசடி செய்தது தெரியவந்ததால் தான் ராஷ்மிகா கடும் கோபத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார். ராஷ்மிகாவிடம் சுமார் 80 லட்சம் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.