ஓய்வூதிய திட்டமிடல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிட வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதியத்தின்போது நிதி பாதுகாப்பை வழங்குகின்றது. இது மாத வருமானம் தருகின்றது. இந்த திட்டத்தில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பெறலாம். நீங்கள் 25 வயதாக இருக்கும் போது 6550 முதலீடு செய்ய ஆரம்பித்தால் அடுத்த 35 வருடங்கள் என்றால் உங்களுக்கு 60 வயது இருக்கும். அந்த நேரத்தில் ஓய்வு பெற்ற பிறகு திட்டம் முதிர்ச்சி அடையும். பிறகு நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.