ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும் இடையே போர் நீடித்து வந்தது.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு முன் வந்துள்ளது. இதன் மூலம் ஹமாஸ் பிடியில் இருக்கும் 50 பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட 76 வயது பெண் ஹன்னா கட்ஸிர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஹன்னா கட்ஸிர் என்ற அந்தப் பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நினைத்ததாகவும் அதற்கு எதிரிகள் முட்டுக்கட்டையாக இருந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் ஹமாஸ் தரப்பில் கூறியுள்ளனர்.