பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஹாசீர் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்தார். படத்தில் நடிப்பதாக ரூ 65 லட்சம் பேசி முன்பணமாக ரூ 20 லட்சம் நடிகர் யோகி பாபு பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூபி பிலிம்ஸ் (Rooby Films) என்ற நிறுவனம் நடத்திவரும் ஹாசீர் அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.