தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவில் தேனம்மாள்(75) என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ஜீவா. இந்நிலையில் தேனம்மாளுக்கும் ஜீவாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மூதாட்டி தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு ஜீவாவிடம் கேட்டார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஜீவா பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்து மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜீவாவை கைது செய்தனர்.