மதுரை மாவட்டத்திலுள்ள கொடிமங்கலம் புதூரில் சாரதி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், சரோஜன் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரம் குற்றாலத்தில் குளிப்பதற்காக சாரதி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் சொக்கம்பட்டி பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சாரதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.