சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கமலக்கண்ணன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது மின்சார மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக பேட்டரி தீப்பிடித்து எரிந்து வீடு முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

இதனால் வீட்டில் இருந்த கமலக்கண்ணன், அவரது மனைவி சாரதி, குழந்தை அர்ஜுனன், தந்தை பெரியசாமி, தாய் சாந்தி ஐந்து பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் வீட்டின் முதல் மாடிக்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மொபட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் கரும்புகையில் சிக்கிக்கொண்ட ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.