வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பதை விட ஏராளமானவர்கள் தற்போது போஸ்ட் ஆபீஸ்ல் பணத்தை சேமிப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில் பணத்தை எங்கே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். போஸ்ட் ஆபீஸில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் காலவைப்பு திட்டம். இந்த திட்டத்தில் மக்கள் நல்ல வருமானத்தை பெறுகிறார்கள். இது ஒரு பிரபலமான ரீபண்ட் திட்டம். இந்த திட்டத்தில் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

இதில் பல நன்மைகளும் உள்ளது .நீங்கள் செய்யும் முதலீடுக்கு 7.5% வட்டி எளிதாக கிடைக்கும். ஒவ்வொரு காலண்டிலும் வட்டி மாறிக்கொண்டே இருக்கும். இதனால் மக்கள் மத்தியில் சிறிது அச்சம் நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பாக இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஏழு சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த வட்டி விகிதத்தோடு  இந்த திட்டம் தபால் அலுவலக திட்டங்களில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கும் இந்த திட்டம் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.