இயக்குநர் லிங்குசாமி ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு நன்றாகவே ஓடியது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜி படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் கதையை கேட்டார் நடிகர் அஜித். நானும் முழுக் கதையையும் சொன்னேன்.

கதையை பொறுமையாக கேட்ட அவர், இந்த படம் ஓடாது என்றார். வேறு கதை எதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று  கூறினார். ஆனால் என்னுடன் இருந்தவர்களோ, அஜித் அப்படித் தான் பேசுவார். அவர் பேச்சை கேட்க வேண்டாம் படத்தை இயக்குங்கள் என்றார்கள். நானும் படத்தை இயக்கினேன். ஆனால் கடைசியில் அஜித் சொன்னது நடந்தது.  படம் ஓடவில்லை என்றார்.