கேரளா ஒட்டும்புரம் தூவல் தீரம் அருகில் 35 பயணிகளுடன் சென்றபோது சொகுசு படகு கடலில் மூழ்கியதில் 21 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து உள்ளது. இதுவரையிலும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதனிடையே பலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

காவல் துறை, கேரள தீயணைப்பு, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதே நேரம் மீட்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனே ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதோடு இன்று நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.